அரூர் அருகே பணத்தகராறில் ஓட்டல் தொழிலாளி படுகொலை
அரூர் அருகே பணத்தகராறில் ஓட்டல் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் மேல்பாட்சாபேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி அருள்மொழி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் கடந்த பிப்ரவரி மாதம் அரூர் தில்லை நகரை சேர்ந்த யோகானந்தம் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். கடன் வாங்கிய பணத்தை யோகானந்தம் திரும்ப கொடுக்குமாறு சுரேஷிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் சாக்குப்போக்கு கூறி வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே அவர்களுக்குள் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் யோகானந்தம், இவரது மனைவி எழிலரசி உள்ளிட்ட 4 பேர், சுரேஷ் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனால் சுரேசின் மனைவி அருள்மொழி, உறவினர்களை அழைத்து வர சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்த போது சுரேஷ் மற்றும் யோகானந்தம் உள்ளிட்டவர்களை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அருள்மொழி பல்வேறு இடங்களில் தேடியும் சுரேஷ் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை அரூர் அருகே உள்ள புறாக்கல் உட்டை பகுதியில் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக அரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது பிணமாக கிடப்பது சுரேஷ் என தெரியவந்தது. மேலும் சுரேஷ் கல்லால் தாக்கி படுகொலை செய்து இருப்பது தெரிந்தது.
இது குறித்து சுரேசின் மனைவி அருள்மொழி அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் யோகானந்தம், அவருடைய மனைவி எழிலரசி உள்ளிட்ட 4 பேர் சுரேசை அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பணத்தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் மேல்பாட்சாபேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி அருள்மொழி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் கடந்த பிப்ரவரி மாதம் அரூர் தில்லை நகரை சேர்ந்த யோகானந்தம் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். கடன் வாங்கிய பணத்தை யோகானந்தம் திரும்ப கொடுக்குமாறு சுரேஷிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் சாக்குப்போக்கு கூறி வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே அவர்களுக்குள் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் யோகானந்தம், இவரது மனைவி எழிலரசி உள்ளிட்ட 4 பேர், சுரேஷ் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனால் சுரேசின் மனைவி அருள்மொழி, உறவினர்களை அழைத்து வர சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்த போது சுரேஷ் மற்றும் யோகானந்தம் உள்ளிட்டவர்களை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அருள்மொழி பல்வேறு இடங்களில் தேடியும் சுரேஷ் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை அரூர் அருகே உள்ள புறாக்கல் உட்டை பகுதியில் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக அரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது பிணமாக கிடப்பது சுரேஷ் என தெரியவந்தது. மேலும் சுரேஷ் கல்லால் தாக்கி படுகொலை செய்து இருப்பது தெரிந்தது.
இது குறித்து சுரேசின் மனைவி அருள்மொழி அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் யோகானந்தம், அவருடைய மனைவி எழிலரசி உள்ளிட்ட 4 பேர் சுரேசை அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பணத்தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story