சபாநாயகர் வைத்திலிங்கத்துக்கு நாராயணசாமி வாழ்த்து


சபாநாயகர் வைத்திலிங்கத்துக்கு நாராயணசாமி வாழ்த்து
x
தினத்தந்தி 6 Oct 2018 12:00 AM GMT (Updated: 5 Oct 2018 11:50 PM GMT)

சபாநாயகர் வைத்திலிங்கத்தின் பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

மழை காரணமாக சபா நாயகர் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்துசெய்யுமாறு தனது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் அறிவுறுத்தி இருந்தார்.

இதைத்தொடர்ந்து சபா நாயகர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் நேற்று பொதுப்பணி மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளுடன் இணைந்து தொகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கினார்கள்.

சபாநாயகர் வைத்திலிங்கத்துக்கு அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, தனவேலு, எம்.என்.ஆர்.பாலன், அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம், சபாநாயகரின் தனி உதவியாளர் வினோத், முன்னாள் கவுன்சிலர் தமிழரசி, ராஜா, ஏரிப்பாக்கம் தமிழ்ச்செல்வன், ஷண்முக பிலிம்ஸ் சுரேஷ், வி.வி.ஆர். நற்பணி இயக்க தலைவர் சசிகுமார், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அருண்ராஜ் என்ற வசந்த், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் சஞ்சீவி என பல்வேறு தரப்பினரும் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நேற்று மாலை கவர்னர் கிரண்பெடி சபாநாயகர் வைத்திலிங்கத்தை அவரது வீட்டில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

Next Story