செஞ்சி அருகே இளம்பெண், விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை


செஞ்சி அருகே இளம்பெண், விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 9 Oct 2018 10:00 PM GMT (Updated: 9 Oct 2018 7:04 PM GMT)

செஞ்சி அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செஞ்சி, அக்.

செஞ்சி அருகே உள்ள சோமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் தனஞ்செழியன்(வயது 27). இவருக்கும் மேல்மலையனூர் அடுத்த கொடுக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகள் கவிதா(வயது 20) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரித்திகா என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது.

சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கவிதா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிக்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவிதா உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் லலிதா அனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதா உடல்நலக்குறைவு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story