ராஜீவ் கொலை குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் கேட்டு ஐகோர்ட்டில் மனு


ராஜீவ் கொலை குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் கேட்டு ஐகோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 12 Oct 2018 11:45 PM GMT (Updated: 12 Oct 2018 7:42 PM GMT)

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது–

எனது மகன் ரவிச்சந்திரன், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 27 வருடங்களாக சிறையில் இருந்து சிரமப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தமிழக அரசு விடுதலை செய்யலாம் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அந்த விவகாரத்தில் தமிழக கவர்னர் முடிவு எடுக்கும் வரை அல்லது என் மகனை அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யும் வரை அவருக்கு நீண்ட நாள் பரோல் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து தமிழக சிறைத்துறை பதிலளிக்க உத்தரவிட்டும், வழக்கு விசாரணையை வருகிற 25–ந்தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டனர்.


Next Story