திருவாரூரில்: வாலிபர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் - 2 பேர் கைது


திருவாரூரில்: வாலிபர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் - 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Oct 2018 9:45 PM GMT (Updated: 12 Oct 2018 7:47 PM GMT)

திருவாரூரில் முன்விரோதம் காரணமாக வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர், 

திருவாரூர் கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் விஜி என்கிற விஜயகாந்த் (வயது 32). இவர் நேற்று முன்தினம் வண்டிகாரத் தெருவில் டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செம்புராயன் மகன் சிவக்குமார் (31), மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜயகுமார் (34) ஆகிய இருவரும் முன்விரோதம் காரணமாக விஜயகாந்திடம் தகராறு செய்து அவரை இரும்பு கம்பி, அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் காயமடைந்த விஜயகாந்த் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விஜயகாந்த் திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார், விஜய குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Next Story