விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதல்; மாணவர்கள் உள்பட 6 பேர் கைது


விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதல்; மாணவர்கள் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2018 10:00 PM GMT (Updated: 13 Oct 2018 6:44 PM GMT)

விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதலில் மாணவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள கோட்டநத்தத்தை சேர்ந்தவர் ஆனந்த கண்ணன்(வயது 18). பிளஸ்–2 படித்து வருகிறார். இவருக்கும் பிளஸ்–1 படித்துவரும் தடங்கம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவனுக்கும் இடையே பஸ்சில் செல்லும்போது தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பிளஸ்–1 மாணவனை வழிமறித்து ஆனந்த கண்ணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவன் மற்றும் அவனது சகோதரர்கள் சந்திரபோஸ்(24), வேல்முருகன் (22), உறவினர்கள் பாண்டி(18), பார்த்திபன்(30) ஆகியோர் ஆனந்தகண்ணனின் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததுடன் ஆனந்தகண்ணனின் சகோதரர் வேல்ராஜை(24) தாக்கினர்.

இதுபற்றி வேல்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் சந்திரபோஸ், வேல்முருகன், பாண்டி, பார்த்திபன் மற்றும் பிளஸ்–1 மாணவன் ஆகியோரை வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்தனர். பிளஸ்–1 மாணவன் கொடுத்தபுகாரின் பேரில் ஆனந்தகண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர்.


Next Story