பள்ளத்தி விடுதியில் கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு


பள்ளத்தி விடுதியில் கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு
x
தினத்தந்தி 15 Oct 2018 10:30 PM GMT (Updated: 15 Oct 2018 8:41 PM GMT)

ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதியில் கபடி போட்டி நடைபெற்றது. தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதியில் ஆண்டுதோறும் கபடி போட்டி நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் கபடி போட்டி நடைபெற்றது. இதில் ஆலங்குடி, திருவரங்குளம், புதுக்கோட்டை, வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 19 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டி பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது.

இதில் முதல் பரிசை நயினாங்கொல்லை அணியும், 2-வது பரிசை கரும்பிரான் கோட்டை அணியும், 3-வது பரிசை பள்ளத்திவிடுதி நேதாஜி அணியும் பெற்றன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் ரொக்கப்பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. போட்டியை ஆலங்குடி, பள்ளத்திவிடுதி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள், கபடி ரசிகர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளத்திவிடுதி நேதாஜி நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். 

Next Story