செங்கல்பட்டில் 2 ஆண்டுகளாக தேடப்பட்ட கொள்ளையன் கைது


செங்கல்பட்டில் 2 ஆண்டுகளாக தேடப்பட்ட கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 20 Oct 2018 10:15 PM GMT (Updated: 20 Oct 2018 7:04 PM GMT)

செங்கல்பட்டில் 2 ஆண்டுகளாக தேடப்பட்ட கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கொள்ளை நடைபெற்று வந்தன. கொள்ளையனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் பகுதியில் மர்மநபர் ஒருவர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே செங்கல்பட்டு போலீஸ் துணை சூப்பிரண்டு கந்தன் தலைமையில் செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் தனிப்படை போலீசார் அங்கு சென்று அந்த நபரை நேற்று சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் பிடிபட்டவர் சென்னை வேளச்சேரியை சேர்ந்த கோபி என்கிற குள்ள கோபி (வயது 39) என்பதும், செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. கோபியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 90 பவுன் தங்க நகைகளை மீட்டனர். இவர் மீது சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 20 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.


Next Story