புதுச்சத்திரம் அருகே: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு


புதுச்சத்திரம் அருகே: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
x
தினத்தந்தி 24 Oct 2018 10:00 PM GMT (Updated: 24 Oct 2018 10:33 PM GMT)

புதுச்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பரங்கிப்பேட்டை, 

கடலூர் அருகே உள்ள பச்சையாங்குப்பத்தை சேர்ந்தவர் அரிதாஸ். இவரது மகன் பிரதீஷ் (வயது 29). சம்பவத்தன்று இவர் பரங்கிப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு அவர் உறவினரை பார்த்து விட்டு, மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் பச்சையாங்குப்பத்துக்கு புறப்பட்டார். புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியப்பட்டு ஐந்து கண் மதகு என்ற இடத்தில் வந்தபோது, நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து பிரதீஷ் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரதீஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story