ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு


ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 25 Oct 2018 9:45 PM GMT (Updated: 25 Oct 2018 8:30 PM GMT)

பரேல் பாலத்தில் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.

மும்பை, 

மும்பை வடலா செயின்ட் ஜோசப் பள்ளி அருகே வசித்து வந்தவர் பிரகாஷ் சிங் (வயது23). இவர் கார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் பிரகாஷ் சிங் புதிய டாக்சி வாங்கி உள்ளார்.

இதை பதிவு செய்வது தொடர்பான வேலைக்காக நேற்று முன்தினம் வாலிபர் வீட்டில் இருந்து தார்டுதேவ் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் சென்றார்.

இதில் பரேல் இந்துமாதா பாலத்தில் சென்றபோது திடீரென ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறிய வாலிபர் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தார்.
அப்போது சாலையில் விழுந்த வாலிபரின் மீது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஏறி இறங்கியது. இதில் தலைநசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மோசமான சாலையின் காரணமாக தான் வாலிபர் தவறி விழுந்து பலியானதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Next Story