பேரளம் அருகே சாராயம் கடத்திய 3 பேர் கைது மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்


பேரளம் அருகே சாராயம் கடத்திய 3 பேர் கைது மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 Oct 2018 10:00 PM GMT (Updated: 28 Oct 2018 8:11 PM GMT)

பேரளம் அருகே சாராயம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 220 லிட்டர் சாராயம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

பேரளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் மற்றும் போலீசார் பேரளம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இஞ்சிக்குடி ரெயில்வேகேட் அருகே வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். இதில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வளத்தாமங்கலம் பகுதியை சேர்ந்த கபீர் (வயது 22) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும், 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல பாவட்டக்குடி பஸ் நிறுத்தம் அருகில் வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் மறித்து சோதனை செய்தனர். இதில் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூரத்தாழ்வார்குடியை சேர்ந்த கணேசன் (வயது 28), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும், 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story