உளுந்தூர்பேட்டை அருகே: வேன் மோதி தொழிலாளி பலி


உளுந்தூர்பேட்டை அருகே: வேன் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 30 Oct 2018 9:30 PM GMT (Updated: 30 Oct 2018 9:23 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 65), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் அவர் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு, அங்குள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற வேன் ஒன்று, ஆறுமுகம் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story