துறைமுக வழித்தடத்தில் இன்று மின்சார ரெயில் சேவை ரத்து


துறைமுக வழித்தடத்தில் இன்று மின்சார ரெயில் சேவை ரத்து
x
தினத்தந்தி 3 Nov 2018 11:15 PM GMT (Updated: 3 Nov 2018 9:23 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக இன்று துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.

மும்பை,

மத்திய ரெயில்வேயின் துறைமுக வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.40 மணி முதல் மாலை 4.10 மணி வரை சி.எஸ்.எம்.டி. - சுன்னாப்பட்டி, பாந்திரா இடையே பராமரிப்பு பணி நடக்கிறது.

இதன் காரணமாக சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர், பன்வெல் செல்லும் ரெயில்கள் காலை 11.34 மணி முதல் மாலை 4.23 மணி வரையும், பாந்திரா, அந்தேரி, கோரேகாவ் செல்லும் ரெயில்கள் காலை 9.56 மணி முதல் மாலை 4.16 மணி வரையும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதேபோல வாஷி, பேலாப்பூர், பன்வெலில் இருந்து சி.எஸ்.எம்.டி. வரும் ரெயில்கள் காலை 9.53 மணி முதல் பிற்பகல் 2.44 மணி வரையும், கோரேகாவ், அந்தேரி, பாந்திராவில் இருந்து வரும் ரெயில்கள் காலை 10.45 மணி முதல் மாலை 4.58 மணி வரையும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இருப்பினும் பன்வெல் - குர்லா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். மெயின் மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் வழக்கம் போல இயங்கும். எனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை துறைமுக வழித்தட பயணிகள் மெயின் மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடங்கள் வழியாக பயணித்து கொள்ளலாம்.

Next Story