புயல் எச்சரிக்கை: சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


புயல் எச்சரிக்கை: சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 7 Nov 2018 10:15 PM GMT (Updated: 7 Nov 2018 5:07 PM GMT)

புயல் எச்சரிக்கையால் சின்னமுட்டம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரி,

தென்மேற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் மீன்வளத்துறை சார்பில் கரையோர பகுதியில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, கடல் கொந்தளிப்பு மற்றும் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 250–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் காலையில் கடலுக்கு சென்று விட்டு மாலையில் கரைக்கு திரும்புவார்கள். புயல்  எச்சரிக்கை விடுத்ததையடுத்து சின்னமுட்டம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், விசைப்படகுகள் அனைத்தும் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடித்து வருகிறார்கள். இவர்கள்  ஆழ்கடலுக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடிப்பார்கள். புயல் எச்சரிக்கையையொட்டி நேற்று பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Next Story