தீபாவளி பண்டிகையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ரூ.7 கோடி மதுவிற்பனை


தீபாவளி பண்டிகையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ரூ.7 கோடி மதுவிற்பனை
x
தினத்தந்தி 7 Nov 2018 10:30 PM GMT (Updated: 7 Nov 2018 6:42 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ரூ.7 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் 100 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம்் மதிப்பிலான மது விற்்பனை செய்யப்படும். பண்டிகை நாட்களில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம். அதிலும் தீபாவளி பண்டிகை என்றால் மதுபிரியர்களின் அதிகபட்ச கொண்டாட்டத்தின் காரணமாக டாஸ்மாக் கடைகளில் மதுவிற்்பனை பல மடங்கு நடை பெறும். இதற்காக டாஸ்மாக் கடைகளில் கூடுதலான மதுவகைகள் இருப்பு வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு மது, பீர் வகைகள் என மொத்தம் ரூ.7 கோடி மதிப்பிலான மதுவகைகள் விற்பனையானது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக மதுவிற்பனை நடைபெற்றுள்ளது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story