ஈரோடு மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ஈரோடு மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Nov 2018 10:00 PM GMT (Updated: 12 Nov 2018 7:07 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஈரோடு,

சட்டம் பயின்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தொழில்நுட்ப துறை ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் பவானி தாலுகா அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சுகானந்த சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மொத்தம் 33 பேர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கோபி வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கோபியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் ஜெயந்தன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகேசன் கலந்து கொண்டு பேசினார்.


Next Story