ஈரோட்டில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த டிரைவர் கைது


ஈரோட்டில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த டிரைவர் கைது
x
தினத்தந்தி 26 Nov 2018 11:00 PM GMT (Updated: 26 Nov 2018 9:53 PM GMT)

ஈரோட்டில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

ஈரோடு மணல்மேடு சென்னிமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் சதாம் (வயது 21). கால்டாக்சி டிரைவர். இவர் மீது ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு பெண் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மகளை சதாம் கடத்தி சென்றுவிட்டதாகவும், அவரை மீட்டு தர வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சதாம் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை தேடினார்கள்.

இந்தநிலையில் ஈரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த சதாமை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர் கடத்தி திருமணம் செய்த சிறுமியையும் போலீசார் மீட்டனர்.

Next Story