நாகர்கோவிலில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு


நாகர்கோவிலில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2018 10:30 PM GMT (Updated: 29 Nov 2018 9:51 PM GMT)

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி நாகர்கோவிலில் அவருடைய சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நாகர்கோவில்,

தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இவருடைய சொந்த ஊர் நாகர்கோவில் ஒழுகினசேரி ஆகும். இவரது நினைவாக நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு பகுதியில் என்.எஸ்.கிருஷ்ணன் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அவருடைய பிறந்த நாளையொட்டி நேற்று நாகர்கோவிலில் உள்ள உருவ சிலைக்கு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் என்.எஸ்.கிருஷ்ணன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமை தாங்கினார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், நகர செயலாளர் சந்துரு, நிர்வாகிகள் ஜெயசீலன், சுகுமாரன், கண்ணன், ஜெகதீஷ், இ.என்.சங்கர், விக்ரமன், அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் ஏ.எம்.டி. செல்லத்துரை, தவசிமுத்து, ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் தோவாளை ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் என்.எஸ். கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் தேசிய பேரவை சார்பில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரவையின் தலைவர் தியாகி முத்துக்கருப்பன் தலைமை தாங்கி, மாலை அணிவித்தார். இதில் நரேந்திரன், ஆழ்வார் பிள்ளை, சுப்பிரமணியபிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் இருந்த கலைவாணர் அரங்கத்தை இடித்து, கட்டப்படும் புதிய கட்டிடத்துக்கும் கலைவாணர் பெயரை சூட்ட வேண்டும் என்று வேண்டுகோளும் வைத்தனர்.

Next Story