அஞ்செட்டி அருகே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி


அஞ்செட்டி அருகே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 3 Dec 2018 11:15 PM GMT (Updated: 3 Dec 2018 6:54 PM GMT)

அஞ்செட்டி அருகே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மரியாளம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயபிரியா (26). இவர்களுக்கு சந்தியா என்ற மகளும், ஜெயசூர்யா என்ற மகனும் உள்ளனர். ரமேசுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

நேற்றும் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஜெயபிரியா தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து அவர் தனது மகள் சந்தியாவுக்கும், மகன் ஜெயசூர்யாவுக்கும் விஷம் கொடுத்துள்ளார். பின்னர் அவரும் விஷம் குடித்தார்.

சிறிது நேரத்தில் குழந்தைகளும், ஜெயபிரியாவும் வாந்தி எடுத்தனர். இது குறித்து அக்கம்பக்கத்தினர் அவரிடம் கேட்ட போது நடந்த சம்பவத்தை ஜெயபிரியா கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story