தக்கலை அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை


தக்கலை அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 5 Dec 2018 10:15 PM GMT (Updated: 5 Dec 2018 2:47 PM GMT)

தக்கலை அருகே குடும்ப தகராறில் தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே உள்ள முளகுமூடு, பனலிக்காட்டுவிளையை சேர்ந்தவர் சகாயராஜன் (வயது48), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரோஸ்மேரி (36). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தைகள் இல்லை. எனவே, ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தனர்.

சகாயராஜனுக்கு மது பழக்கம் உண்டு. இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் சகாயராஜன் அதிக மது போதையில் வீட்டுக்கு வந்தார். இதை மனைவி கண்டித்துள்ளார். இதனால், அவர்கள் இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

வி‌ஷம் குடித்தார்

இதனால், மனமுடைந்த சகாயராஜன் வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சகாயராஜன் பரிதாபமாக இறந்தார்.

 இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story