நகை, பணம் இல்லாததால் ரெயில்வே ஊழியர் வீட்டுக்கு தீ வைத்த கொள்ளையர்கள்


நகை, பணம் இல்லாததால் ரெயில்வே ஊழியர் வீட்டுக்கு தீ வைத்த கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 5 Dec 2018 10:00 PM GMT (Updated: 5 Dec 2018 7:01 PM GMT)

நகை, பணம் இல்லாததால் ரெயில்வே ஊழியர் வீட்டுக்கு கொள்ளையர்கள் தீ வைத்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த புட்லூர் கணேஷ் விஸ்தா நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 49). ரெயில்வே ஊழியர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரபு வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி எழிலரசி வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த எல்.இ.டி. டி.வி ஒன்றும் 2 மணிக்கணினிகளும் திருட்டு போனது தெரியவந்தது. மேலும் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது தெரியவந்தது. வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் வீட்டில் தீ வைத்துள்ளனர். இதில் அங்கிருந்த நாற்காலி ஒன்று தீயில் கருகியது.

இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story