நர்சிங் மாணவி தீக்குளித்து தற்கொலை


நர்சிங் மாணவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 15 Dec 2018 10:15 PM GMT (Updated: 15 Dec 2018 8:45 PM GMT)

பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த மாலதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்லாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகள் மாலதி(வயது 19). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த மாலதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாலதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக இரும்புலிகுறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாலதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story