செல்போனில் இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது
ஆண்டிப்பட்டி, வருசநாடு அருகே இளம்பெண்ணை செல்போனில் ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆண்டிப்பட்டி,
வருசநாடு அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சுரேஷ்(வயது 23). இவருக்கும் 17 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். சுரேசும் அந்த இளம்பெண்ணும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். அப்போது சுரேஷ் அந்த பெண்ணிடம், திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்தார். மேலும் தனிமையில் இருந்த போது சுரேஷ் தனது செல்போனில் அந்த பெண்ணை ஆபாசமாக படம் எடுத்துள்ளார். இந்தநிலையில் அவர் ஆபாச படத்தை இளம்பெண்ணிடம் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உஷா வழக்குப்பதிவு செய்து, சுரேசை பிடித்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தார். மேலும் சுரேசை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story