சென்னை பெசன்ட் நகரில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி


சென்னை பெசன்ட் நகரில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 17 Dec 2018 9:30 PM GMT (Updated: 17 Dec 2018 7:28 PM GMT)

சென்னை பெசன்ட் நகரில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர் பலியனார்.

அடையாறு,

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் கோபி. ஆட்டோ டிரைவர். இவரது மகன் ரமேஷ்குமார் (வயது 18). ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (18) என்பவருடன் பெசன்ட் நகரில் உள்ள பெசன்ட் அவென்யூ சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் மோதியது. இதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இதை பார்த்த அந்த பகுதி மக்கள், அவர்களை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ரமேஷ்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

ரமேஷ்குமார் உடலை கைப்பற்றிய போலீசார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த விக்னேஷ் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story