9-வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


9-வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2018 10:45 PM GMT (Updated: 18 Dec 2018 7:11 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் 9-வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் ஒரே அரசாணையின் மூலம் வழங்க வேண்டும். அலுவலகங்களில் கழிவறை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கணினி வழி சான்றிதழ் மற்றும் இணைய தள பணிகளுக்கு செலவு தொகை வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் அடிப்படை கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்திட வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10-ந் தேதி முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று 9-வது நாள் வேலை நிறுத்தத்தையொட்டி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜகுமார், மாவட்ட பொருளாளர் சற்குணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொருளாளர் ராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story