அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2019 10:30 PM GMT (Updated: 7 Jan 2019 8:33 PM GMT)

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பி.ஆர்.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்சமுத்து, மாநில இலக்கிய அணி இணை செயலாளர் அறிவு (என்கிற) சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். அரியலூர் மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை துணை தலைவர் மனோகரன், இணை செயலாளர் தண்டபாணி, மாவட்ட மாணவர் அணி துணை தலைவர் தவசீலன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் முத்தையன், மாவட்ட தொழிற்சங்க இணை செயலாளர் ஜெயசங்கர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story