கோட்டக்குப்பம் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது


கோட்டக்குப்பம் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 10 Jan 2019 10:45 PM GMT (Updated: 10 Jan 2019 11:44 PM GMT)

கோட்டக்குப்பம் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்,

வானூர் தாலுகா கீழ்கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ஆறுமுகம் (வயது 38). இவர் புதுச்சேரி மாநிலம் சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி உணவு இடைவேளையின்போது அங்குள்ள வேலந்தோப்பு பகுதியில் சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது அங்கு வந்த ஆறுமுகம் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி தனது வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் கூறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுபற்றி கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின்பேரில் ஆறுமுகம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story