குடும்ப பிரச்சினை காரணமாக தண்டவாளத்தில் படுத்து முதியவர் தற்கொலை


குடும்ப பிரச்சினை காரணமாக தண்டவாளத்தில் படுத்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 16 Jan 2019 10:45 PM GMT (Updated: 16 Jan 2019 5:16 PM GMT)

கொரடாச்சேரி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக தண்டவாளத்தில் படுத்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள செல்லூர் பகுதியை சேர்ந்தவர் திருஞானம்(வயது62). இவருடைய மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். இதனால் அவர் தனது மகன் துரைராஜ் வீட்டில் தங்கி இருந்தார். திருஞானம் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு நேற்று அதிகாலை கொரடாச்சேரி ரெயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளத்துக்கு சென்று தண்டவாளத்தில் படுத்தார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருஞானம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் உடல் அருகே கடிதம் ஒன்று கிடந்தது. அந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்ப பிரச்சினை காரணமாக முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்த சம்பவம் செல்லூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story