எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை


எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை
x
தினத்தந்தி 17 Jan 2019 10:15 PM GMT (Updated: 17 Jan 2019 7:10 PM GMT)

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றிய, பேரூர் அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது.

வாலாஜாபாத்,

வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை, ஏகனாம்பேட்டை பகுதிகளில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கும், கருக்குப்பேட்டை, வாலாஜாபாத் பகுதிகளில் உள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைகளுக்கும் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

விழாவில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அக்ரி நாகராஜன், மாவட்ட பிரதிநிதி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வரதராஜுலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் கே.பிரகாஷ்பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கே.கங்காதரன், முன்னாள் தொகுதி செயலாளர் கே.ஆர்.தர்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story