மானூர் அருகே பொக்லைன் எந்திரம் இடித்ததில் கொத்தனார் பரிதாப சாவு


மானூர் அருகே பொக்லைன் எந்திரம் இடித்ததில் கொத்தனார் பரிதாப சாவு
x
தினத்தந்தி 18 Jan 2019 9:15 PM GMT (Updated: 18 Jan 2019 2:52 PM GMT)

மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தில் பொக்லைன் எந்திரம் இடித்ததில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

மானூர், 

மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தில் பொக்லைன் எந்திரம் இடித்ததில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

கொத்தனார்

நெல்லை மாவட்டம்

மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரம் வேதாளம் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 31). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் பஞ்சாயத்துகளில் சிறிய வேலைகளை காண்டிராக்ட் எடுத்து செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அழகியபாண்டியபுரம் நாடார் தெருவில் பொக்லைன் எந்திரம் மூலம் கழிவுநீர் ஓடையை சரிசெய்யும் பணி நடைபெற்று கொண்டு இருந்தது.

பரிதாப சாவு

அப்போது எதிர்பாராதவிதமாக பொக்லைன் எந்திரத்தின் கைப்பகுதி, அங்கு நின்று கொண்டு இருந்த முத்துக்குமாரை இடித்து தள்ளியது. இதில் முத்துக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து முத்துக்குமாரின் அண்ணன் காளித்துரை கொடுத்த புகாரின்பேரில், பொக்லைன் எந்திர டிரைவர் அழகியபாண்டியபுரம் சின்னச்சாமி மகன் பெரியசாமி (30) என்பவர் மீது மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துக்குமாருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். மேலும் முத்துக்குமார் தமிழர் விடுதலைக்களம் இயக்கத்தின் மானூர் ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story