கடலூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கடலூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2019 10:30 PM GMT (Updated: 20 Jan 2019 2:04 PM GMT)

கடலூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் கடலூர் மண்டலம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கடலூர்,

இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் கடலூர் மண்டலம் சார்பில் கடலூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மண்டல ஆலோசகர் சுப்புராமன் தலைமை தாங்கினார். செயலாளர் அரிய செல்வம் முன்னிலை வகித்தார். கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வெங்கடேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஓய்வுபெற்ற ஊழியர்சங்க செயலாளர் மருதவாணன் நிறைவுரை£யாற்றினார்.

சட்டப்படியான ஊதிய உயர்வு, போனஸ் வழங்க வேண்டும், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கி ஊழியர்கள் மீது வேலைப்பளுவை சுமத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில துணை தலைவர் புருஷோத்தன், மாவட்ட தலைவர் மனோகர், பி.எஸ்.என்.எல். ஓய்வுபெற்றோர் சங்கம் மாவட்ட செயலாளர் மதியழகன், அரசு ஊழியர் சங்க மாவட்டசெயலாளர் அரிகிருஷ்ணன், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பால்கி, பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சம்மபந்தம், வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் ஸ்ரீதர், முஜீப் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இந்தியன் வங்கியின் தற்காலிக ஊழியர் நடராஜன் நன்றி கூறினார்.


Next Story