திருவள்ளூர் அருகே வீட்டின் முன்பு நின்றதை தட்டி கேட்டதால் தகராறு


திருவள்ளூர் அருகே வீட்டின் முன்பு நின்றதை தட்டி கேட்டதால் தகராறு
x
தினத்தந்தி 21 Jan 2019 9:30 PM GMT (Updated: 21 Jan 2019 7:29 PM GMT)

திருவள்ளூர் அருகே வீட்டின் முன்பு நின்றதை தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டதில் இருதரப்பினரும் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). நேற்று முன்தினம் பிரகாசின் வீட்டின் முன்பு புட்லூர் ஸ்ரீசாய் நகரை சேர்ந்த பூபாலன் மற்றும் அவரது நண்பரான கன்னிகாபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்த கார்த்திக் ஆகிய 2 பேரும் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.

இதைக் கண்ட பிரகாஷ், இருவரையும் தட்டிக்கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த பூபாலன், கார்த்திக் ஆகிய 2 பேரும், பிரகாசை தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு பிரகாசும் பூபாலன் மற்றும் அவரது நண்பரையும் தாக்கியதாக தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து இருதரப்பினரும் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story