நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 30 Jan 2019 10:45 PM GMT (Updated: 30 Jan 2019 8:05 PM GMT)

விளையாட்டு வீரர்களுக்கு 2018-19-ம் ஆண்டிற்கான உதவித் தொகையான மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர் களுக்கு 2018-19-ம் ஆண்டிற்கான உதவித் தொகையான மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gbv.in மூலம் வருகிற 21-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெற மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் 2018 ஏப்ரல் முதல் தேதியன்று 58 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மத்திய-மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற இயலாது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story