தேர்தல் தேதி அறிவித்தவுடன் யாருடன் கூட்டணி என தெரிவிக்கப்படும் ரங்கசாமி பேட்டி


தேர்தல் தேதி அறிவித்தவுடன் யாருடன் கூட்டணி என தெரிவிக்கப்படும் ரங்கசாமி பேட்டி
x
தினத்தந்தி 2 Feb 2019 10:30 PM GMT (Updated: 2 Feb 2019 8:23 PM GMT)

வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து, தேர்தல் தேதி அறிவித்தவுடன் தெரிவிக்கப்படும் என, புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

காரைக்கால்,

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று முன்தினம் இரவு காரைக்காலில் நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவிற்கு வருகை தந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தயாராக உள்ளது. யாருடன் கூட்டணி என்பது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே தெரிவிக்கப்படும். புதுச்சேரியில் தற்போது ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படாத அரசாக உள்ளது. மத்திய பா.ஜனதா அரசின் இடைக்கால பட்ஜெட் சிறப்புமிக்கதாய் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, எம்.எல்.ஏ.க்கள் திருமுருகன், சந்திரபிரியங்கா மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆனந்த், உதயகுமார், பாரீஸ் ரவி, ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story