பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2019 8:56 PM GMT (Updated: 2 Feb 2019 8:56 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* ஆவடி, அரக்கோணம், பட்டாபிராம், திருவள்ளூர், திருத்தணி நோக்கி மூர்மார்க்கெட் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து, காலை 10.05 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் 24 மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது. இதைப்போல் ஆவடி, அரக்கோணம், பட்டாபிராம், திருவள்ளூர், திருத்தணியில் இருந்து மூர்மார்க்கெட் மற்றும் கடற்கரை நோக்கி காலை 10.05 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் 21 மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்துசெய்யப்படும்.

* மூர்மார்க்கெட்-திருத்தணி மதியம் 3 மணிக்கு புறப்படும் ரெயில் மூர்மார்க்கெட்-ஆவடி இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

* ஆவடி-பட்டாபிராம் மதியம் 1.50 மணிக்கும், மூர்மார்க்கெட்-அரக்கோணம் காலை 9.45 மணிக்கும், அரக்கோணம்-திருத்தணி காலை 11.55, 1.50, 2.25 மணிக்கும், திருவள்ளூர்-மூர்மார்க்கெட் மதியம் 1.15 மணிக்கும், ஆவடி-அரக்கோணம் காலை 11.10 மணிக்கும் சிறப்பு பணிகள் ரெயில் இயக்கப்படும்.

Next Story