கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை - கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு


கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை - கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Feb 2019 9:30 PM GMT (Updated: 4 Feb 2019 7:06 PM GMT)

கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவத்தில், கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த செல்லையா மகன் ஜெகன் (வயது 30). இவருக்கும் டெல்சியா (22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக 40 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ரொக்கம் உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெகன், அவருடைய தாயார் பாக்கியவதி உள்ளிட்டவர்கள் கூடுதல் வரதட்சணை கேட்டு டெல்சியாவை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து டெல்சியா தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் ஜெகன், பாக்கியவதி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story