விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Feb 2019 9:45 PM GMT (Updated: 5 Feb 2019 12:09 AM GMT)

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே விவசாயியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மேலப்பாளையூரை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 38). விவசாயி. இவர் தனது நண்பர் சுந்தரபாண்டியனுடன், டிராக்டரில் கரும்பு ஏற்றச்சென்றார். அப்போது அதேபகுதியை சேர்ந்த பிரகாஷ், ஜம்புலிங்கம், வெற்றிவேல் ஆகிய 3 பேரும் வல்லியம் டாஸ்மாக் கடையின் பின்புறம் மோட்டார் சைக்கிளை வழியில் நிறுத்தியிருந்தனர். இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை வேல்முருகன் வழியை விட்டு நகர்த்தினார். இதையறிந்த பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து வேல்முருகனை ஆபாசமாக திட்டி தாக்கியதாக தெரிகிறது. மேலும் இதை தடுக்க வந்த சுந்தரபாண்டியனையும் அவர்கள் திட்டி தாக்கி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பிரகாஷ், ஜம்புலிங்கம், வெற்றிவேல் ஆகிய 3 பேர் மீது கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story