அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கலெக்டரிடம் மனு


அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 5 Feb 2019 10:30 PM GMT (Updated: 5 Feb 2019 8:29 PM GMT)

சாலை, சுகாதாரம், தெருவிளக்கு, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர், ஆலத்தூர் மேற்கு, வேப்பந்தட்டை மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்களில் கடந்த சில தினங்களாக தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டங்களில் முன்னாள் மீன் வளத்துறை அமைச்சரும், தி.மு.க. மாநில மீனவரணி செயலருமான கே.பி.பி.சாமி பங்கேற்றார். இக்கூட்டத்தில் சாலை, சுகாதாரம், தெருவிளக்கு, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து பொதுமக்களின் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து அவர் கோரிக்கை மனு அளித்தார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story