மளிகை வியாபாரி மர்மசாவு போலீசில் மனைவி புகார்


மளிகை வியாபாரி மர்மசாவு போலீசில் மனைவி புகார்
x
தினத்தந்தி 6 Feb 2019 10:00 PM GMT (Updated: 6 Feb 2019 9:28 PM GMT)

கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மனைவி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார்.

வண்டலூர்,

கன்னியாகுமரியை சேர்ந்தவர் முருகபெருமாள் (வயது 45). அங்கு மளிகை கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார். அப்போது அவர் இறந்து விட்டதாக அவரது நண்பர்கள் கன்னியாகுமரியில் இருந்த முருகபெருமாளின் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த அவரது மனைவி தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகபெருமாள் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story