ஓட்டப்பிடாரம் அருகே பயங்கரம்: மனைவி வெட்டிக் கொலை மருந்தாளுனருக்கு வலைவீச்சு


ஓட்டப்பிடாரம் அருகே பயங்கரம்: மனைவி வெட்டிக் கொலை மருந்தாளுனருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Feb 2019 9:45 PM GMT (Updated: 8 Feb 2019 3:07 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த மருந்தாளுனரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த மருந்தாளுனரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மருந்தாளுனர்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வடக்கு பரும்பூர் ரைஸ்மில் காலனியை சேர்ந்தவர் செந்தூர் பாண்டி (வயது 57). இவர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நவமணி (49). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

நவமணி வசித்து வந்த வீடு அவருடைய சித்தி சீவிழி என்பவர் பெயரில் உள்ளது. சீவிழி, அந்த வீட்டின் பின்பக்கத்தில் மற்றொரு வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் செந்தூர்பாண்டி தனது மனைவியிடம், சீவிழியின் பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு எழுதி கேட்குமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் மனைவி நவமணி காலம் தாழ்த்தி வந்தார். இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

வெட்டிக்கொலை

நேற்று செந்தூர்பாண்டி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தூர்பாண்டி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி நவமணியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த நவமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன், சப்–இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நவமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவருக்கு வலைவீச்சு

இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தூர்பாண்டியை வலைவீசி தேடி வருகின்றனர்.

கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story