மயிலாடுதுறை அருகே தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு


மயிலாடுதுறை அருகே தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 8 Feb 2019 10:30 PM GMT (Updated: 8 Feb 2019 5:11 PM GMT)

மயிலாடுதுறை அருகே தீக்காயம் அடைந்த, பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

குத்தாலம்,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள செங்குடி கீழத்தெருவை சேர்ந்த கண்ணையன் மகள் வசந்தி (வயது 32). சம்பவத்தன்று இவருக்கும், பக்கத்துவீட்டை சேர்ந்த வீரமணி (56), அவருடைய மனைவி தவமணி, மகன் சுரேந்தர் (22) ஆகியோர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மேற்கண்ட 3 பேரும் சேர்ந்து வசந்தியை தாக்கியதோடு, அவரை மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வசந்தி, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணி, சுரேந்தர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த வசந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

Next Story