திருச்செங்கோட்டில் ரூ.5 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்


திருச்செங்கோட்டில் ரூ.5 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
x
தினத்தந்தி 8 Feb 2019 10:00 PM GMT (Updated: 8 Feb 2019 5:43 PM GMT)

திருச்செங்கோட்டில் ரூ.5 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.

திருச்செங்கோடு,

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது.

இதேபோல் நேற்று பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, கந்தம்பாளையம், மொளசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 100 மூட்டைகளில் தேங்காய் பருப்புகளை தென்னை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். அவற்றை ஈரோடு மாவட்டம் முத்தூர், வெள்ளக்கோவில், கோபிசெட்டிபாளையம் மற்றும் வெண்ணந்தூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தேங்காய் பருப்பு வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

அப்போது முதல் தரம் ரூ.84.15 முதல் ரூ.105.15 வரையிலும், 2-ம் தரம் ரூ.61.75 முதல் ரூ.70.75 வரையிலும் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். மொத்தம் 100 மூட்டை தேங்காய் பருப்புகள் ரூ.5 லட்சத்திற்கு ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story