கோட்டக்குப்பத்தில் திருட்டு வழக்கில் 4 பேர் கைது


கோட்டக்குப்பத்தில் திருட்டு வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 Feb 2019 10:30 PM GMT (Updated: 11 Feb 2019 5:57 PM GMT)

கோட்டக்குப்பத்தில் திருட்டு வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

கோட்டக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் தலைமையிலான போலீசார், சின்னகோட்டக்குப்பம் பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சின்னகோட்டக்குப்பத்தை சேர்ந்த குமரேசன் (வயது 22), ஷாகுல்அமீது (26), பெரிய முதலியார்சாவடி செந்தில்குமார் (19), புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த அப்பு (19) என்பதும், இவர்கள் 4 பேரும் சேர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னகோட்டக்குப்பத்தில் உள்ள கோகாஸ்படேல் (62) என்பவருடைய வீட்டின் ஜன்னலில் போடப்பட்டிருந்த கொசுவலையை நீக்கிவிட்டு அதன் அருகில் மேஜை மீது வைத்திருந்த 3 பவுன் நகை மற்றும் செல்போனை திருடியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து குமரேசன், செந்தில்குமார், அப்பு, ஷாகுல்அமீது ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story