நீடாமங்கலம் அருகே இருதரப்பினர் மோதல்; கணவன்-மனைவி படுகாயம் 5 பேர் மீது வழக்குப்பதிவு


நீடாமங்கலம் அருகே இருதரப்பினர் மோதல்; கணவன்-மனைவி படுகாயம் 5 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 11 Feb 2019 10:15 PM GMT (Updated: 11 Feb 2019 7:03 PM GMT)

நீடாமங்கலம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகேயுள்ளது அய்யம்பேட்டை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் தங்கபாபு. இவருடைய மகன் பிரகாஷ்(வயது33). விவசாயி. இவருக்கும், இவருடைய சித்தப்பா மோகன்தாஸ் என்பவருக்கும் வேலி அமைப்பதில் முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று பிரகாசுக்கும், மோகன்தாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் மோதி கொண்டனர். இதில் பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி அபிநயா ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மன்னார்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5 பேர் மீது வழக்கு

இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் மோகன்தாஸ், விக்னேஷ். தினேஷ், பிரகாஷ், அபிநயா ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story