மனிதர்களே இல்லாமல் விவசாயம்
என்ன தான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும், உணவுத் தேவையை பூர்த்தி செய்வது விவசாயத்தால் மட்டுமே முடியும்.
வெயிலிலும் மழையிலும் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு உதவவே இங்கிலாந்தைச் சேர்ந்த ஹார்ப்பர் ஆடம்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மனிதர்களே இல்லாமல் தானியங்கி வாகனங்களையும், ட்ரான்களையும் மட்டுமே வைத்து பார்லியை பயிரிட்டு சாதனை படைத்துள்ளனர். ‘கைகள் அற்ற ( HANDS FREE ) ஹெக்ட்டேர் ப்ராஜெக்ட்’ என்று இதற்கு பெயரிட்டுள்ளனர். தானியங்கி டிராக்டர்களை கொண்டு விதைகளை தூவி, ட்ரான் மூலம் கண்காணித்து மனிதர்கள் அற்ற விவசாயத்தை சாத்தியப்படுத்தியுள்ளனர். சிறப்பான முறையில் அறுவடையும் செய்துள்ளனர். இதுவே எதிர்காலத்தின் விவசாயம் என்கின்றனர் இந்த குழுவினர்.
Related Tags :
Next Story