நாமக்கல்லில் லாரி பட்டறை தொழிலாளி தீக்குளித்து தற்கொலை போலீசார் விசாரணை


நாமக்கல்லில் லாரி பட்டறை தொழிலாளி தீக்குளித்து தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Feb 2019 10:45 PM GMT (Updated: 13 Feb 2019 8:13 PM GMT)

நாமக்கல்லில் லாரி பட்டறை தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல், 

நாமக்கல் கருப்பட்டிபாளையத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 52). இவர் சேலம் சாலையில் உள்ள லாரி பட்டறை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த மோகன், சமீப காலமாக உறவினர்களிடம் பேசுவதை குறைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

விரக்தியில் இருந்த அவர் நேற்று முன்தினம் நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள கடை ஒன்றின் முன்பு உடலில் ஆயிலை பூசிக்கொண்டு தீ வைத்து கொண்டார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு சிகிச்சை பலன்இன்றி மோகன் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர் மணி (52) என்பவர் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோகன் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story