பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Feb 2019 10:00 PM GMT (Updated: 20 Feb 2019 7:49 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* சென்னை கடற்கரை-ஆவடி இரவு 11.15 மணிக்கும், ஆவடி-கடற்கரை அதிகாலை 4.10 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில் வருகிற 24-ந் தேதி முதல் மார்ச் 3-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* வேளச்சேரி-ஆவடி இரவு 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் மார்ச் 4-ந்தேதி வரை பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.

இதேபோல் ஆவடி-வேளச்சேரி அதிகாலை 4.10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் மார்ச் 5-ந்தேதி வரை பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு கடற்கரையில் அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு வேளச்சேரி செல்லும்.

* கும்மிடிப்பூண்டி-கடற்கரை இரவு 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் மார்ச் 4-ந்தேதி வரை பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு மூர்மார்க்கெட்டுக்கு இயக்கப்படும். இதேபோல் கடற்கரை-அரக்கோணம் நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் மார்ச் 5-ந்தேதி வரை மூர்மார்க்கெட்டில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story