ஓட்டப்பிடாரம் அருகே பள்ளிக்கூட மாணவி தற்கொலை


ஓட்டப்பிடாரம் அருகே பள்ளிக்கூட மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 20 Feb 2019 9:45 PM GMT (Updated: 20 Feb 2019 8:17 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளிக்கூட மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஓட்டப்பிடாரம், 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பெருநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பழகன் (வயது 40) கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி. அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உண்டு. 2-வது மகள் கவுரி (13). அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இவள் நேற்று காலையில் பள்ளிக்கூடத்துக்கு செல்வதற்கு தனது சைக்கிளை எடுத்தாள். அப்போது சைக்கிள் பஞ்சராகி இருந்தது. இதனால் தனது தங்கையுடன் பள்ளிக்கூடத்துக்கு வருவதாக கூறி உள்ளாள். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கவுரி பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோரும், கவுரியை சத்தம் போட்டுவிட்டு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த கவுரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ஓட்டப்பிடாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story