ஊரப்பாக்கத்தில் துணிகரம் இருசக்கரவாகன பெட்டியில் இருந்த 28 பவுன் நகை திருட்டு
ஊரப்பாக்கத்தில் இருசக்கரவாகன பெட்டியில் இருந்த 28 பவுன் தங்கநகையை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
வண்டலூர்,
இதனையடுத்து பெட்ரோல் நிலையம் அருகே உள்ள டீக்கடைக்கு சென்ற ராஜீவ், அங்கு டீ குடித்து விட்டு வந்தார். பின்னர் சந்தேகத்தின்பேரில் பார்த்தபோது, இருக்கையின் அடியில் வைத்திருந்த நகையை காணவில்லை. மர்மநபர்கள் அந்த நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் ராஜீவ் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அய்யஞ்சேரி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் (வயது 54). இவர் நேற்று முன்தினம் மதியம் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த 28 பவுன் தங்க நகைகளை மீட்டார். அந்த நகைகளை தனது இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் வைத்தார். பின்னர் ஊரப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சென்றார். அங்கு பெட்ரோல் போட்டார்.
இதனையடுத்து பெட்ரோல் நிலையம் அருகே உள்ள டீக்கடைக்கு சென்ற ராஜீவ், அங்கு டீ குடித்து விட்டு வந்தார். பின்னர் சந்தேகத்தின்பேரில் பார்த்தபோது, இருக்கையின் அடியில் வைத்திருந்த நகையை காணவில்லை. மர்மநபர்கள் அந்த நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் ராஜீவ் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story