விக்கிரவாண்டி அருகே கார் மோதி பெண் சாவு


விக்கிரவாண்டி அருகே கார் மோதி பெண் சாவு
x
தினத்தந்தி 23 Feb 2019 10:15 PM GMT (Updated: 23 Feb 2019 5:36 PM GMT)

விக்கிரவாண்டி அருகே கார் மோதி பெண் இறந்தார்.

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டியை அடுத்த சித்தணி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மனைவி ஜெகதீஸ்வரி (வயது 55). சம்பவத்தன்று இவர் சித்தணியில் இருந்து விழுப்புரத்திற்கு செல்வதற்காக அதே பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி பஸ்சிற்காக காத்திருந்த ஜெகதீஸ்வரி மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று ஜெகதீஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story